சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து : இந்தியாவின் பிரம்மாஸ்திரம் - பாலைவனமாகும் பாகிஸ்தான்!
Aug 5, 2025, 04:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து : இந்தியாவின் பிரம்மாஸ்திரம் – பாலைவனமாகும் பாகிஸ்தான்!

Web Desk by Web Desk
Jun 10, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிந்து நதி நீர் ஒப்பந்தம் உலகிலேயே மிக முறையற்ற நதி நீர் பங்கீட்டு  ஒப்பந்தமாகும் என்று பிரபல Geo Strategy நிபுணர் Brahma Chellaney பிரம்மா செல்லனி தெரிவித்துள்ளார். இது குறித்து விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

பயங்கரவாதத்துக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா காலவரையறை இன்றி நிறுத்தி வைத்துள்ளது. இந்தியா- பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான்- சீனா என நான்கு நாடுகளிடையே சிந்து நதி பாய்ந்து ஓடி கடைசியாக கராச்சி அருகே அரேபிய கடலில் கலக்கிறது.

சிந்து நதியின் நீரை நிர்வகிக்கச் சிந்து நதி நீர் ஒப்பந்தம் 1960 ஆம் ஆண்டு, இந்தியா-பாகிஸ்தான் இடையே கையெழுத்தானது. சிந்து நதியின் துணை நதிகள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆகிய சிறிய நதிகள் கிழக்கு ஆறுகள் என்றும், ஜீலம்,செனாப் மற்றும் சிந்து ஆகியவை மேற்கு ஆறுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் படி, சிறிய கிழக்கு நதிகளின் நீரை இந்தியாவின் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.    மேற்கு நதிகளின் பெரும்பாலான நீரைப் பயன்படுத்தும் உரிமை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

1947,1965, 1971 என மூன்று போர்கள், 1999 கார்கில் போர், மும்பை தாக்குதல் ,நாடாளுமன்ற தாக்குதல், புல்வாமா தாக்குதல் என இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களைப் பாகிஸ்தான் நடத்திய போதும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ததில்லை.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைக் காலவரையறை இன்றி நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவை வரவேற்றுள்ள பிரபல Geo Strategy நிபுணர் Brahma Chellaney,  இது இந்திய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும், தொடர்ச்சியான துரோகத்தைத் தண்டிப்பதற்கும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நடவடிக்கை ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படை நிபந்தனைகள் சரிந்தால், பாதிக்கப்பட்ட தரப்பினருக்குச் சர்வதேச சட்டத்தின் கீழ் அதை இடைநிறுத்தவோ அல்லது திரும்பப் பெறவோ உரிமை உண்டு என்பதையும் பிரம்மா செல்லனி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சிந்து நதி நீர் ஒப்பந்தம் முறையற்ற ஒப்பந்தமாகவே உள்ளது என்று கூறிய அவர், அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார். இந்தியாவின் அசாதாரண தாராள மனப்பான்மையின் செயலாகும். நதிக்கரைக்கு மேலே அமைந்துள்ள இந்தியா, 80 சதவீதத்துக்கும் அதிகமான நீரைப் பயன்படுத்தும் உரிமையைப் பாகிஸ்தானுக்கு ஒதுக்கிக் கொடுத்துள்ளது.

ஒப்பந்தத்தின் படி,   சிந்து நதியின் மொத்த நீரில் 80.52 சதவீதமும் மற்றும் மேற்கு நதிகளின் நீரில் கிட்டத்தட்ட 100 சதவீதமும் பாகிஸ்தானுக்குக் கிடைக்கிறது.  மொத்த சிந்து நதி நீரில் 19.48 சதவீதமே இந்தியாவுக்குக் கிடைக்கிறது. கிட்டத்தட்ட 65 ஆண்டுகளுக்குப் பிறகும், உலகின் மிகவும் தாராளமான நீர் பகிர்வு ஒப்பந்தமாகச் சிந்து நதி நீர் ஒப்பந்தம் உள்ளது.

இந்தியாவின் தாராள மனப்பான்மைக்குப் பயங்கரவாத தாக்குதல்கள் மூலம் பாகிஸ்தான்  நன்றி காட்டி வருகிறது என்று தெரிவித்துள்ள Brahma Chellaney பிரம்மா செல்லனி, அப்பாவி பொதுமக்கள் மீது மீண்டும் மீண்டும் பயங்கர வாத தாக்குதல்கள் நடத்த அனுமதிக்கும் பாகிஸ்தான், அமைதியான ஒத்துழைப்புக்காக ஏற்படுத்திய ஒப்பந்தத்தின்  நன்மைகளை இழக்க வேண்டியது நியாயமே என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் பிற வல்லரசுகளும் தேசியப் பாதுகாப்பைக் காரணம் காட்டி ஒருதலைப்பட்சமாக நதிநீர் ஒப்பந்தங்களிலிருந்து வெளியேறியுள்ளதைச்  சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவுக்கும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க முழு உரிமை உண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கான முன்னாள் தூதர் சதீஷ் சந்திரா,சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து  பாகிஸ்தான் மீது  இந்தியா ஏவிய  “பிரம்மாஸ்திரம்”  என்று தெரிவித்துள்ளார்.  பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் ராஜ தந்திர நடவடிக்கை பாகிஸ்தானைப் பாலைவனம் ஆக்கும் என்று கூறப்படுகிறது.

Tags: சிந்து நதிநீர் ஒப்பந்தம்Indus Water Treaty cancelled: India's Brahmastra - Pakistan becomes a desertஇந்தியாவின் பிரம்மாஸ்திரம்பாலைவனமாகும் பாகிஸ்தான்
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரை பிற பகுதிகளுடன் இணைக்கும் கனவு நிறைவேறியது : ஃபரூக் அப்துல்லா பெருமிதம்!

Next Post

வனப்பகுதியில் உணவுத்தட்டுப்பாடு : ஊருக்குள் புகும் கரடிகள் – சேதமாகும் பயிர்களால் விவசாயிகள் வேதனை!

Related News

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

பிரதமருக்கு பாதுகாப்பு அளித்த பெண் அதிகாரி : வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடக்கம்!

கடன் வாங்கி வெளிநாட்டில் படிக்க போகாதீங்க…! : சுருங்கும் IT வேலைகள் – எச்சரிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 4 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பேரழிவுகளை முன்பே கணித்த காமிக்ஸ் எழுத்தாளர் : நவீன நாஸ்ட்ரடாமஸ் என கொண்டாடப்படும் “ரியோ டாட்சுகி”!

அடுத்தடுத்து நடத்தப்பட்ட 3 ஆபரேஷன் : களை எடுக்கப்பட்ட பயங்கரவாதிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

விவசாயிகள் நலனை அலட்சியப்படுத்தியது திமுக அரசு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கமல்ஹாசன் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார் : தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டனர் : நயினார் நாகேந்திரன்

சீன ஆக்கிரமிப்பு குறித்த தனது கூற்று சொந்தமாக உருவாக்கியதா என ராகுல் காந்தி சொல்ல வேண்டும்? : கிரண் ரிஜிஜூ

கேரளா : சிறுவர் பூங்காவில் ராட்டினம் சுற்றி விளையாடிய காட்டு யானை!

ஒடிசா : மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் சோதனை – நகைகள், பணம் கண்டுபிடிப்பு!

குளித்தலை : தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் – ஆடவர் இரட்டையர் இணை சாம்பியன்!

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் – இந்தியா திரில் வெற்றி!

பீகார் : கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி பெண் பலி – இருவர் படுகாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies