உயர்நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில் பேட்டரி கார் சேவையை நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.
உயர் நீதிமன்ற மதுரை அமர்வுக்கு பேருந்து மூலம் வருகை தரும் பொதுமக்கள் நிறுத்தத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் சிரமத்தை சந்தித்து வந்தனர்.
இதனை தவிர்க்கும் பேட்டரி கார் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவையை நீதிபதி எஸ். எம். சுப்புரமணியம் தொடங்கி வைத்தார்.