குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சரும், பாஜகவின் பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநில மேலிடப் பொறுப்பாளருமான . விஜய் ரூபானி அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது இழப்பை விவரிக்க வார்த்தைகள் இல்லை. நம் தாய்திருநாடு இன்று ஒரு உன்னதமான தலைவரை இழந்திருக்கிறது. மக்கள் நலப்பணிக்காக தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ரூபானி, தனது தன்னலமற்ற பணிகளின் மூலம் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பார்.
அவரது பூதவுடல் இம்மண்ணுலகை விட்டு மறைந்திருந்தாலும், அவரது அளப்பரிய சாதனைகள் மூலம் காலத்திற்கும் அவர் நம்மிடையே வாழ்வார் என்பதில் ஐயமில்லை.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் சுற்றத்தாருக்கும், நண்பர்களுக்கும், பாஜக சொந்தங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன் என நயினார நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.