இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படைத்தலைவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுகள் நடத்தினார். அமெரிக்கா- ஈரான் இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ஈரான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானின் அணு ஆயுத தளங்கள், ராணுவ தளங்கள், பயிற்சி முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஈரான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி உள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைவர் ஹொசைன் சலாமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.