BSF வீரர்களை அழைத்துச் செல்ல அனுப்பப்பட்ட மோசமான ரயில் குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், 4 ரயில்வே உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்கு வடகிழக்கு மாநிலங்களிலிருந்து ஜம்மு-காஷ்மீருக்கு BSF வீரர்களை அழைத்துச் சென்ற ரயில் 72 மணி நேரம் தாமதமாகச் சென்றது.
இதற்கு BSF வீரர்கள் கடும் அதிருப்தி தெரிவித்த நிலையில், குப்பை கூளங்களாக இருந்த ரயில் பெட்டிகளில் துர்நாற்றம் வீசும் கழிவறைகள், கிழிந்த இருக்கைகள், உடைந்த மேற்கூரை மற்றும் கதவுகள் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகின. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் தற்போது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.