இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ருத்ராஸ்திரா போர் விமானத்தின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் உள்ள பொக்ரான் துப்பாக்கிச் சூடு தளத்தில் இந்த சோதனையானது நடைபெற்றது.
ராணுவத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்தி இந்தியாவின் பாதுகாப்பு நிலையை விமானம் வலுப்படுத்தும் எனவும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.