பஞ்சாப் மாநிலம் பதான் கோட் அருகே ராணுவ ஹெலிகாப்டர் திடீரென தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியில் ராணுவத்தினர் விமானப் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இந்திய விமானப்படையின் அப்பாச்சி ஹெலிகாப்டரில் வீரர்கள் பயிற்சி மேற்கொண்ட போது தொழிற்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் நங்கல்பூர் என்ற இடத்தில் திடீரென தரையிறக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஏராளமானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.