மதுரையில் முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெறும் வளாகத்திற்குள் முருகனின் அறுபடை வீடு கோயில்களின் மாதிரி அமைக்கும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
மதுரை ஒத்தக்கடை அம்மா திடலில் இந்து முன்னணி மற்றும் பாஜக சார்பாக முருக பக்தர்கள் மாநாடு வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முகூர்த்தக்கால் நடும் பணியானது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே மாநாடு வளாகத்திற்குள் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டு நாளை முதல் பக்தர்களின் பூஜைகள் நடைபெற உள்ளன.
இதற்கான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இந்த மாநாட்டிற்கு லட்சக்கணக்கான முருக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.