அண்மையில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்துடன் தங்கள் நாட்டு நிறுவனத்தை தொடர்புப்படுத்தி வெளியான செய்திக்குத் துருக்கி மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 12ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், விபத்தில் சிக்கிய போயிங் ரக விமானத்தின் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளைத் துருக்கி கையாண்டதாகச் செய்தி வெளியானது.
இதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ள துருக்கியின் தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம், விமானத்தின் பராமரிப்பு பணிகளைத் துருக்கி மேற்கொள்ளவில்லை என விளக்கம் அளித்துள்ளது.
மேலும், இந்தியா – துருக்கி உறவில் விரிசல் ஏற்படுத்தவே, போலி தகவல் பரப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளது.