ஆஸ்திரேலியாவில் கைது நடவடிக்கையின்போது காவல்துறை அதிகாரியால் கழுத்து நெறிக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அடிலெய்டு நகரில் உள்ள மோட்பரி நாா்த் பகுதியைச் சேர்ந்தவர் கௌரவ் குந்தி. இவர் அதே பகுதியில் உள்ள ராய்ஸ்டன் பூங்கா அருகே மனைவியுடன் மதுபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைக் கவனித்த ரோந்து போலீசார், கௌரவை கைது செய்ய முயன்றனர்.
இதற்கு கெளரவ் ஒத்துழைக்கவில்லை எனக் கூறப்படும் நிலையில், காவலர்கள் அவரை தரையில் தள்ளியுள்ளனர். பின்னர், கௌரவின் கழுத்தில் காவலா் முட்டியால் கடுமையாக அழுத்தியுள்ளனர்.
இதனால் கழுத்து நெறிக்கப்பட்டு அவர் சுயநினைவை இழந்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்