தூத்துக்குடி மாவட்டம் கொல்லம்பரும்பு கிராமத்தில் அரசு பேருந்துகளை முறையாக இயக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தைக் கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
அரசு பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால் பள்ளி மாணவர்கள் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை இருப்பதாகக் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, பேருந்துகளை முறையாக இயக்கக்கோரிப் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.