சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான பூவை ஜெகன் மூர்த்தி மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், களம்பாக்கத்தில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரர் கூலிப்படை மூலம் கடத்தப்பட்டார். இந்த சம்பவத்தில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த வழக்கில் இருவரும் ஆஜரான நிலையில், உயர்நீதிமன்ற வளாகத்திலேயே ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டார்.
மேலும், அவரை சஸ்பெண்ட் செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், சிறுவன் கடத்தல் தொடர்பான வழக்கில் திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஆஜரான பூவை ஜெகன் மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.