திருச்சி மாவட்டம் முசிறி அருகே, இடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் ஒரு குடம் தண்ணீரில் ஈமச்சடங்குகளைச் செய்ய வேண்டிய அவலநிலைக்குக் கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
முசிறி அருகே உள்ள அய்யம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சேந்தமாங்குடி கிழக்கு கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அங்குள்ள இடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் இறுதிச்சடங்கு செய்யக் கிராம மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
ஒரே ஒரு குடம் தண்ணீரை வைத்து ஈமச் சடங்குகளை முடிப்பதாகக் கூறும் கிராம மக்கள், தண்ணீர் வசதி ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.