சர்வதேச யோகா தினத்தையொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள பர்வதவர்த்தினி அம்பாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவிகள் யோகா கலைகளை செய்து அசத்தினர்.
உடற்கல்வி ஆசிரியர்கள் ஒவ்வொன்றாக ஆசனங்களை சொல்ல சொல்ல அவற்றை மாணவிகள் அனைவரும் ஒரே போல செய்து காட்டினர். இதைத்தொடர்ந்து யோகாவின் முக்கியத்துவம் குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.