சர்வதேச யோகா தினமான இன்று, திருநெல்வேலியில் யோகா பயிற்சி நிகழ்வில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று யோகா செய்தார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் யோகா பயிற்சியில் ஈடுபட்டு, நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறுவதன் மூலம், வலிமையான பாரதத்தை கட்டமைக்கும் பெரும் பணியில் பங்கேற்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.