கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மேற்கூரை பழுதானதால் மழைநீர் கசிந்த வகுப்பறையில் மாணவர்கள் பாடம் கற்கும் வீடியோ வலை தளங்களில் பரவி வருகிறது.
பொள்ளாச்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் மேற்கூரை சேதமடைந்து காணப்படுவதால், வகுப்பறைக்குள் ஆங்காங்கே மழை நீர் தேங்கியபடி காணப்பட்டது.
இதனைக் கண்ட மாணவி ஒருவரின் தந்தை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலான நிலையில் உரிய விசாரணை நடத்தப்படும் என மாவட்ட கல்வித்துறை தெரிவித்துள்ளது.