மதுரை அம்மா திடலில் நாளை நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
முருக பக்தர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் விதத்தில் மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் பிரம்மாண்ட மாநாடு நாளை நடைபெற உள்ளது.
இந்து முன்னணி சார்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மாநாட்டுத் திடலில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை, ஓய்வு அறை, வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்டவை சிறந்த முறையில் இந்து முன்னணி சார்பில் அமைக்கப்பட்டுள்ளன.
கர்ப்பிணிகள், முதியோர்களுக்குச் சக்கர நாற்காலி, தாய் பாலூட்டும் அறை உள்ளிட்டவையும் மாநாடு நடைபெற உள்ள இடத்தில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில் அம்மா திடலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.