மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் மாலை அணிவித்து ஆசீர்வாதம் வழங்கினர்.
மதுரையில் இந்து முன்னணி சார்பில் சிறப்பாக நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பங்கேற்றார்.
பச்சை வேட்டி மற்றும் தோளில் பச்சைத் துண்டு அணிந்து, பாரம்பரிய தமிழ் அடையாளங்களோடு வருகை தந்த பவன் கல்யாணுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவருக்கு மாலை அணிவித்து ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் ஆசீர்வாதம் வழங்கினர். பின்னர், மண்டியிட்டு கீழே அமர்ந்து ஆதீனங்களைப் பவன் கல்யாண் வணங்கினார்.