போர் பதற்றம் நிலவுவதால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்காசிய நாடுகளுக்கு விமானச் சேவையைத் தற்காலிகமாக நிறுத்துவதாக ஏர் இந்தியா நிர்வாகம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானங்கள் அனைத்தும் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்ப நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
துபாய் நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளதால் வளைகுடா நாடுகளுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் அனைத்து விமானச் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் இண்டிகோ விமானச் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.