சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி முன்ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
காதல் திருமண விவகாரத்தில் இளைஞரின் சகோதரரைக் கடத்தியதாக ஜெகன் மூர்த்தி உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து முன் ஜாமீன் கோரி, ஜெகன் மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து விசாரணையை நாளைக்குத் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.