திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் கனரா வங்கியில் போலி நகை வைத்து மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நகை மதிப்பீட்டாளர் பாண்டிகுமார் மற்றும் நகை அடகு வைத்த சோனாஸ்ரீ, தங்கராஜ், கருப்பாயி, சுரேந்திரன் உள்ளிட்ட 5 பேர் போலி நகைகளை அடகு வைத்து 1 கோடியே 25 லட்சம் மோசடி செய்ததாக கனரா மண்டல உதவி பொது மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக நகை மதிப்பீட்டாளர் மற்றும் சோனாஸ்ரீ ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான மூவரை தேடி வருகின்றனர்.