தமிழக – கேரள எல்லைப் பகுதியில் கொன்று புதைக்கப்பட்ட இளைஞரின் உடலை போலீசார் தோண்டி எடுத்தனர்.
வயநாடு பகுதியைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் என்பவர் கடந்தாண்டு மார்ச் மாதம் மாயமானார்.
உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பணப் பிரச்சனை காரணமாக ஹேமச்சந்திரனை கொலை செய்து உடலை நீலகிரி மாவட்டம் சேரம்பாடி வனப்பகுதியில் புதைத்தது தெரியவந்தது.
இதையடுத்து மோப்பநாய் உதவியுடன் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.