பழனி அருகே தொடர்ந்து கனிம வளங்கள் கடத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே சித்தரேவு, ஆயக்குடி, பாப்பன்குளம், சண்முகந்தி ஆகிய பகுதியில் சட்டவிரோதமாக நடந்து வரும் செம்மண் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனச் சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை புகார் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளில் மண் கடத்தப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அதில், கனிமவள கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனிடையே, கனிமவளம் கடத்தப்படும் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.