மின்சார துறையில் தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்துறை ஊழியர்களின் தலைமை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.