குரோஷியாவில் நடந்த ரேபிட் செஸ் போட்டியில், இந்திய வீரர் குகேஷ், சாம்பியன் பட்டம் வென்றார்.
குரோஷியாவின் ஜாக்ரப் நகரில் நடைபெற்ற ரேபிட் செஸ் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், 14 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். இதன் மூலம் அவர் சாம்பியன் பட்டத்தைச் தட்டிச் சென்றார். இப்போட்டியின் முதல் சுற்றில் கிறிஸ்டோப்பிடம் தோல்வியைத் தழுவிய குகேஷ், அடுத்த 5 சுற்றுகளில் தொடர் வெற்றிகளை பதிவு செய்து அசத்தி இருந்தார்.
அதில் ஒரு சுற்றில் நார்வேயைச் சேர்ந்த உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை அபாரமாக வீழ்த்தினார். இதன் மூலம் இப்போட்டியில் கார்ல்சனுக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.