செங்கடலில் பயணித்த கிரீஸ் நாட்டு நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.
சிறிய வகை படகுகளில் வந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சரக்கு கப்பல் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
மேலும், டிரோன்களை கொண்டு சரக்கு கப்பல் மீது குண்டுகளை வீசினர். இந்த தாக்குதலில் சரக்கு கப்பலில் பயணித்த 3 மாலுமிகள் உயிரிழந்தனர்.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமையும் செங்கடலில் பயணித்த சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.