அமெரிக்காவில் சுரங்கப் பாதை இடிந்து விழுந்ததில் சிக்கிக் கொண்ட 31 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
லாஸ் ஏஞ்சல்ஸின் வில்மிங்டன் பகுதியில் கட்டுமானத்திலிருந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது.
அப்போது சுரங்கப்பாதையில் பணியாற்றிக் கொண்டிருந்த 31 தொழிலாளர்கள் சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்தில் 100க்கும் மேற்பட்ட மீட்டு படையினர் குவிக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்றன.
இதையடுத்து சுரங்கப் பாதையில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் 31 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.