சூதாட்ட செயலி விவகாரம் தொடர்பாக 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் சூதாட்ட செயலியால் பணத்தை இழந்து, பலர் சிக்கலில் தவித்து வருகின்றனர். ஒருசிலர் அதிக கடன் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இதனால் சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் தருவதையும், ஊக்கப்படுத்துவதையும் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததாக விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட 29 நடிகர்கள் மற்றும் யூடியூபர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.