சர்ச்சை பேச்சின் பின்னணி - காங்கிரஸை கை கழுவ திமுக திட்டமா?
Sep 9, 2025, 06:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சர்ச்சை பேச்சின் பின்னணி – காங்கிரஸை கை கழுவ திமுக திட்டமா?

Web Desk by Web Desk
Jul 19, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெருந்தலைவர் காமராஜர் குறித்த திருச்சி சிவாவின் பேச்சு, தமிழக மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியிலிருந்து காங்கிரஸைக் கழற்றி விடுவதற்காக திமுக மேற்கொள்ளும் அரசியல் யுக்தியா என்ற கோணத்திலும் விமர்சனம் எழுந்துள்ளது.

காமராஜர் ஏசி இல்லாமல் தூங்க மாட்டார் எனவும், அவரின் உயிர் பிரியும் தருவாயில் கருணாநிதியின் கையைப் பற்றிக் கொண்டு நாட்டையும், ஜனநாயகத்தையும் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் எனக் கூறியதாகத் திருச்சி சிவா பேசியிருப்பது தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரண குடும்பத்தில் பிறந்து இந்திய அரசியலின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கிங் மேக்கராக உருவெடுத்த கர்மவீரர் காமராஜரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாகத் திருச்சி சிவா மீது சரமாரியான விமர்சனம் எழத்தொடங்கியுள்ளன.

காமராஜரின் வரலாறு தெரியாமல் திருச்சி சிவா பேசியிருப்பதாகத் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகையும், காமராஜரை வீழ்த்த திமுக அவிழ்த்துவிடும் கட்டுக்கதைகளில் இதுவும் ஒன்று எனக் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும் மேம்போக்கான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், நேர்மைக்கும் எளிமைக்கும் அடையாளமாகத் திகழ்ந்த பெருந்தலைவரைக் கொச்சைப் படுத்தும் வகையில் பேசிய திமுகவைச் சேர்ந்த தலைவருக்கு வலுவான கண்டனத்தைக் கூட பதிவு செய்யவிடாமல் கூட்டணி தர்மம்  தடுக்கிறதா ? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் அமைதி காக்கும் நிலையில் அவர்களது கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் திருச்சி சிவாவின் பேச்சுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்

கருணாநிதியைப் புகழ்வதாகக் கருதி காமராஜரை இழிவுபடுத்தியதாகக் கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்,பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, தமிழிசை சவுந்திர ராஜன் பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளனர்.

கட்சியின் மூத்த பொறுப்பில் இருக்கும் திருச்சி சிவாவின் இத்தகைய பேச்சைக் கண்டிக்க வேண்டிய திமுக தலைவர் ஸ்டாலின், காமராஜரின் புகழைப் பாடி கடந்து செல்ல கூறியிருப்பதன் பின்னணியில் அரசியல் கணக்குகள் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

கூட்டணிக் கட்சி எனும் பெயரில் தொடர்ந்து அழுத்தத்தைக் கொடுத்து வரும் காங்கிரஸ் கட்சியைத் தாமாகவே கழட்டிவிட திமுக முன்வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் ஆனாலும், சட்டமன்றத் தேர்தல் ஆனாலும் தொண்டர்களே இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக திமுகவினர் மத்தியில் அண்மைக் காலமாகவே தொடர் புகார்கள் எழுந்து வந்த நிலையில் இவ்விவகாரத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி கூட்டணியில் இருந்து காங்கிரஸை கழட்டி விட திமுக திட்டமிடுவதாகவும் பேசப்படுகிறது.

திமுகவை விட்டால் வேறுவழியில்லை என்ற நிலைக்குக் காங்கிரஸ் தள்ளப்பட்டிருப்பதே, காமராஜரை இழிவுபடுத்திப் பேசிய பின்பும் அக்கட்சியின் தலைவர்கள் அமைதியாக இருப்பதற்கான காரணமாகக் கருதப்படுகிறது.

கர்மவீரர் காமராஜரை இழிவுபடுத்திய திமுகவுடன் காங்கிரஸ் இன்னமும் தொடர வேண்டுமா என்ற கேள்வி ஒருபுறம் எழுந்து கொண்டிருக்க, மறுபுறம் காமராஜரைக் குறித்துப் பேசியதே திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றவே என்ற பேச்சும் பரவலாக எழுந்துள்ளது.

Tags: tn politicalBackground to the controversial speech - Is DMK planning to wash its hands of the Congress?காங்கிரஸை கை கழுவ திமுக திட்டமா?சர்ச்சை பேச்சின் பின்னணி
ShareTweetSendShare
Previous Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சிறுமுகை அருகே இயந்திர படகு போக்குவரத்து தொடக்கம்!

Next Post

சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு தினம் – பாஜக சார்பில் ரத்த தான முகாம்!

Related News

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் – கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!

அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

Load More

அண்மைச் செய்திகள்

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து – நேபாள அரசு அறிவிப்பு!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறந்த குடியரசு துணைத் தலைவராக செயல்படுவார் – பிரதமர் மோடி

குடியரசு துணை தலைவர் தேர்தல் – இன்று வாக்குப்பதிவு!

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies