ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உதம்பூர் அருகே கார் மீது லாரி மோதியதில் 5 பேர் காயமடைந்தனர்.
பட்டல் பல்லியன் அருகே அமர்நாத் யாத்ரீகர்கள் 8 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த 5 யாத்ரீகர்கள் காயமடைந்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த மீட்புப் படையினர் காயமடைந்த 5 யாத்திரிகர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.