கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களின் மனுக்களை வாங்குவதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜிங்கல் கதிரம்பட்டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொதுமக்கள், தாங்களின் மனுக்களை தாசில்தார் வாங்க மறுத்ததாகக் குற்றஞ்சாட்டினர்.
மேலும் சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டபோது மனுக்களைப் பெற்ற அதிகாரிகள், அவர் சென்றபின் மனுக்களைப் பெறாமல் திருப்பி அனுப்பியதாகவும் குற்றஞ்சாட்டினர்.