பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Jul 26, 2025, 12:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Web Desk by Web Desk
Jul 25, 2025, 08:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூகுள் நிறுவனத்தின் அசுர வேக வளர்ச்சி, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையை மிகப் பெரிய கோடீஸ்வரராக்கியுள்ளது. ஒரு நிறுவனத்தின் நிறுவனராக இல்லாத அதிகாரி ஒருவர், பில்லியனராக மாறியிருப்பது மிகவும் அரிதான சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் தங்கமகனான சுந்தர் பிச்சை, மதுரையைப் பூர்விகமாகக் கொண்டவர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, தமிழகத்தில் பள்ளிப் படிப்பை முடித்தவர். ஐஐடி கரக்பூரில் பி.டெக்.பட்டம் பெற்ற அவர், அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திலும், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திலும் தனது மேலாண்மை படிப்பை முடித்தவர்.

கடந்த 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் இணைந்த சுந்தர் பிச்சை, தனது திறமையாலும், கடின உழைப்பாலும் படிப்படியாக உயர்ந்தார். 2009-ல் Gmail, google map-ஐ மேற்பார்வை செய்து வந்த சுந்தர் பிச்சை, 2015-ல் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கடந்த 10 ஆண்டுகளாக இதே பதவியில் தொடரும் சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு 1.10 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளதாக ப்ளூம்பெர்க்  அறிக்கை தெரிவிக்கிறது.

அதன்படி சுந்தர் பிச்சையின் சொத்து இந்திய மதிப்பில்  9 ஆயிரத்து 516 கோடியாக உயர்ந்துள்ளது. இதேபோன்று போர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலிலும் சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பு 1.2 பில்லியன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய கோடீஸ்வரர் பட்டியலில் சுந்தர் பிச்சை இடம் பிடித்துள்ளார்.

அவரது சொத்து மதிப்பு உயர்வதற்குக் காரணம், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் பங்குகளின் விலை ஏற்றம் கண்டதுதான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சுந்தர் பிச்சை தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை கூகுள் நிறுவனத்தின் பங்குகள், 400 சதவிகிதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.

குறிப்பாகச் செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ. துறையில் கூகுள் அடைந்த முன்னேற்றம் நிறுவனத்தின் பங்குகளை அசுர வேகத்தில் உயர்த்தியது. இதன்காரணமாக இந்த நிறுவனத்தின் பங்குகள் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து காணப்படுகிறது. முதலீட்டாளர்களுக்கும் 120 சதவீதத்துக்கும் மேலான வருமானத்தையும் வழங்கி உள்ளது.

ஒரு நிறுவனத்தின் நிறுவனராக இல்லாத தலைமை நிர்வாக அதிகாரி ஒருவர் பில்லியனர் ஆவது என்பது மிகவும் அரிதான சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வருவாய் அறிவிப்பில் இருந்து தற்போதுதான் வெளியேறியதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சுந்தர் பிச்சை, இது மிகச்சிறந்த காலாண்டு என்றும், 40வது முறையாக அதைச் செய்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

ஆல்பாபெட்டில் இணைந்து ஆகஸ்ட் உடன் 10 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், கிளவுட், யூடியூப், பிளே போன்றவற்றில் ஏற்பட்டுள்ள நம்ப முடியாத வளர்ச்சியை எண்ணிப் பார்ப்பதாகவும் பதிவிட்டுள்ளார். இதற்கு ஒரே வரியில் IMPRESSIVE என டெஸ்லா நிறுவன இயக்குநர் எலான் மஸ்க் ரிட்விட் செய்துள்ளார். இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.

Tags: பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சைசுந்தர் பிச்சைgoogle news todaytoday googleBillionaire Sundar Pichai: Do you know how much his assets are worth?
ShareTweetSendShare
Previous Post

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Next Post

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Related News

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

மியான்மர் : கனமழையால் திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் – மக்கள் அவதி!

யூடியூப், இன்ஸ்டாவுக்கு செக் வைத்த மஸ்க் : 9 ஆண்டுக்குப் பின் மீண்டு(ம்) வருகிறது VINE!

18,000 அடி உயரத்தில் சரித்திர வெற்றி : கார்கில் போர் – 26வது வெற்றி தினம்!

ஸ்பெயின் : கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை!

கம்போடியா உடனான மோதலில் 3-ஆம் தரப்பு மத்தியஸ்தம் செய்ய தாய்லாந்து மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

சென்னை : இறுதி ஊர்வலத்தின் போது நாட்டு வெடி வெடித்து மாணவி படுகாயம்!

திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் போலீசார் அனுமதி வழங்குவதில்லை : இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு!

நாட்டை காக்க வீர மரணமடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூர்வோம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies