மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பாஜக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு வாடிவாசல் பின்புறம் உள்ள பகுதிகளில் புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பணிகளை பேரூராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது.
புதிய குடிநீர் தொட்டி கட்டுவதால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு நெருக்கடி உருவாகும் எனக்கூறி பேரூராட்சி தலைவரிடம் பாஜகவினர் மனு அளித்துள்ளனர்.
ஆனால், பேரூராட்சி நிர்வாகம் எதுவும் கண்டு கொள்ளாமல் மீண்டும் குடிநீர் தொட்டி கட்டுமான பணிகளை தொடங்கியதால் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.