கருப்புப் பட்டியலுக்குள்தள்ளப்படும் அபாயம் : சட்டவிரோத பரிவர்த்தனை சிக்கலில் பாகிஸ்தான்!
Aug 25, 2025, 04:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

கருப்புப் பட்டியலுக்குள்தள்ளப்படும் அபாயம் : சட்டவிரோத பரிவர்த்தனை சிக்கலில் பாகிஸ்தான்!

Web Desk by Web Desk
Aug 25, 2025, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளால் பாகிஸ்தான் கிரே பட்டியலில் சேர்ந்துவிடும் அபாயம் இருப்பதாகப் பாகிஸ்தான் நிதியமைச்சர் ஔரங்கசீப் அச்சம் தெரிவித்திருக்கிறார். அவரது இந்த பேச்சு பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு பகிரங்கமாகவே நிதி திரட்டுகிறது என்ற இந்தியாவின் வாதத்திற்கு வலு சேர்த்துள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

இந்தியாவின் தாக்குதலால் தகர்க்கப்பட்ட பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டமைக்க பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மூலம் பகிரங்கமாக நிதி திரட்டியது அண்மையில் வெளிச்சத்திற்கு வந்தது. சர்வதேச நிதி நடவடிக்கை பணி குழுவின் கண்ணில் மண்ணை துாவி,’ஈஸி பைசா’, ‘சதாபே’ போன்ற டிஜிட்டல் செயலிகள் மூலம் 400 கோடி ரூபாய் திரட்டும் நடவடிக்கையில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு ஈடுபட்டுள்ளது.

இதனை ஒப்புக்கொள்ளும் வகையில் பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது ஔரங்கசீப் பேசியிருப்பது, சட்டவிரோத பண பரிவர்த்தனைகள் உண்மைதான் என்பதை உறுதி செய்துள்ளது. நிகழ்ச்சில் ஒன்றில் பேசிய அவர், 6 ஆண்டுகளுக்குப் பின்னர், கடினமான சூழலுக்கு மத்தியில் சாம்பல் பட்டியலிலிருந்து பாகிஸ்தான் வெளியேறியிருப்பதாகவும், ஒழுங்குபடுத்தப்படாத டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் பாகிஸ்தானை மீண்டும் கிரே பட்டியலில் சேர்க்க காரணமாகிவிடக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தானில் 25 சதவிகித மக்களால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத டிஜிட்டல் பரிவர்த்தனைகளை, ஒழுங்குமுறைக்குள் கொண்டுவராவிட்டால், சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் நடவடிக்கைக்கு ஆளாகி, நாடு மீண்டும் கிரே பட்டியலுக்குள் விழும் அபாயம் இருப்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

பாகிஸ்தானில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் சட்டவிரோதமாகவே நடைபெற்று வருகின்றன. டிஜிட்டல் பரிவர்த்தனையை முறைப்படுத்துவதற்கான சட்டங்களைத் திருத்துவதில் பாகிஸ்தான் பின்னோக்கியே உள்ளது. கிரிப்டோ மற்றும் டிஜிட்டல் சொத்துக்களுக்கான ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்குவதற்காக முன்மொழியப்பட்ட அவசரச் சட்டம் இன்னும் மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.

பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளிக்கும் விவகாரத்தில், கடந்த 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தான கிரே பட்டிலில் சேர்க்கப்பட்டது. அதன் பின்னரும், பயங்கரவாத நிதி மற்றும் பணமோசடியைத் தடுக்கத் தவறியதன் காரணமாக அப்பட்டியலில் இருந்து பாகிஸ்தானால் மீள முடியவில்லை. 2018 ஜூன் முதல் 2022 அக்டோபர் வரை, பாகிஸ்தான் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகச் சாம்பல் பட்டியலில் இருந்தது. சர்வதேச அளவிலான அழுத்தத்தின் காரணமாக, கிரே பட்டியலில் இருந்து வெளியேறப் பாகிஸ்தான் கடுமையாகப் போராட வேண்டியதிருந்தது.

மீண்டும் கிரே நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்பட்டால், பயங்கரவாத நிதி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியாத நாடு என்று சர்வதேச நிதி நடவடிக்கை குழுவால் அறிவிக்கப்படும். இதனால் சர்வதேச நிதியம், உலக வங்கி போன்ற அமைப்புகளிடம் இருந்து கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.

கிரே பட்டியல் என்பது, சரியான நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட நாட்டை அறிவுறுத்தும் எச்சரிக்கையாகும். அதைப் பொருட்படுத்தாமல், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால், மிகக் கடுமையான விதிகளைக் கொண்ட ‘கருப்பு பட்டியலில்’ பாகிஸ்தான் சேர்க்கப்படும். இந்நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் ஔரங்கசீப்பின் பேச்சு, பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டுவதை பாகிஸ்தான் அரசு கொள்கையாகவே வைத்திருப்பதாக இந்தியா முன்வைத்துள்ள வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

Tags: pakistan news todayRisk of being blacklisted: Pakistan in trouble over illegal transactionsசிக்கலில் பாகிஸ்தான்
ShareTweetSendShare
Previous Post

சாதித்து காட்டிய இஸ்ரோ : ககன்யான் பாராசூட் சோதனை வெற்றி!

Next Post

இந்தியாவின் தனித்துவமான வான் பாதுகாப்பு அமைப்பு : எதிரி ஏவுகணைகளுக்கு சிம்ம சொப்பணம்!

Related News

வான்கடே மைதானத்தில் சுனில் கவாஸ்கருக்கு ஆளுயர சிலை!

5ம் தலைமுறை போர் விமானம் : பிரான்ஸ் உடன் கைகோர்க்கும் இந்தியாவின் DRDO!

கலாம் 2047 நிகழ்ச்சி : தனித் திறமையை வெளிப்படுத்திய மாணவர்கள்!

ரூ.70,000 கோடியில் அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் : கடற்படையை வலுப்படுத்தும் இந்தியா!

இந்தியாவின் தனித்துவமான வான் பாதுகாப்பு அமைப்பு : எதிரி ஏவுகணைகளுக்கு சிம்ம சொப்பணம்!

சாதித்து காட்டிய இஸ்ரோ : ககன்யான் பாராசூட் சோதனை வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவை நிறுத்தம் : இந்திய அஞ்சல் துறை!

தெலங்கானா : பைக் மீது தனியார் நிறுவன பேருந்து மோதி விபத்து!

கர்நாடகா : பெண் பக்தர்களிடம் தவறாக நடந்து கொண்ட பூசாரிக்கு அடி, உதை!

இமாச்சல் : கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு!

தெலங்கானா : 5 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவன் கைது!

தமிழக அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனம் தொடங்கி வைப்பு!

ட்ரீம் 11 உடனான ஒப்பந்தம் ரத்து – பிசிசிஐ

தமிழகத்தின் சாலைகள் வசதிக்காக மத்திய அரசு விடுவித்த நிதி எங்கே? : அண்ணாமலை கேள்வி!

ஹைதராபாத்தில் மின்சாரம் தாக்கி ஒரே வாரத்தில் 10 பேர் பலி!

வால்பாறை : முதியவரின் உயிர் காக்க 8 கி.மீ தொட்டிலில் தூக்கி சென்ற மலைவாழ் மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies