கருப்புப் பட்டியலுக்குள் தள்ளப்படும் அபாயம் : சட்டவிரோத பரிவர்த்தனை சிக்கலில் பாகிஸ்தான்!
Jan 14, 2026, 12:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

கருப்புப் பட்டியலுக்குள் தள்ளப்படும் அபாயம் : சட்டவிரோத பரிவர்த்தனை சிக்கலில் பாகிஸ்தான்!

Murugesan M by Murugesan M
Aug 26, 2025, 03:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளால் பாகிஸ்தான் கிரே பட்டியலில் சேர்ந்துவிடும் அபாயம் இருப்பதாகப் பாகிஸ்தான் நிதியமைச்சர் ஔரங்கசீப் அச்சம் தெரிவித்திருக்கிறார். அவரது இந்த பேச்சு பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு பகிரங்கமாகவே நிதி திரட்டுகிறது என்ற இந்தியாவின் வாதத்திற்கு வலு சேர்த்துள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

இந்தியாவின் தாக்குதலால் தகர்க்கப்பட்ட பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டமைக்க பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மூலம் பகிரங்கமாக நிதி திரட்டியது அண்மையில் வெளிச்சத்திற்கு வந்தது. சர்வதேச நிதி நடவடிக்கை பணி குழுவின் கண்ணில் மண்ணை துாவி,’ஈஸி பைசா’, ‘சதாபே’ போன்ற டிஜிட்டல் செயலிகள் மூலம் 400 கோடி ரூபாய் திரட்டும் நடவடிக்கையில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு ஈடுபட்டுள்ளது.

இதனை ஒப்புக்கொள்ளும் வகையில் பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது ஔரங்கசீப் பேசியிருப்பது, சட்டவிரோத பண பரிவர்த்தனைகள் உண்மைதான் என்பதை உறுதி செய்துள்ளது. நிகழ்ச்சில் ஒன்றில் பேசிய அவர், 6 ஆண்டுகளுக்குப் பின்னர், கடினமான சூழலுக்கு மத்தியில் சாம்பல் பட்டியலிலிருந்து பாகிஸ்தான் வெளியேறியிருப்பதாகவும், ஒழுங்குபடுத்தப்படாத டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் பாகிஸ்தானை மீண்டும் கிரே பட்டியலில் சேர்க்க காரணமாகிவிடக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தானில் 25 சதவிகித மக்களால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத டிஜிட்டல் பரிவர்த்தனைகளை, ஒழுங்குமுறைக்குள் கொண்டுவராவிட்டால், சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் நடவடிக்கைக்கு ஆளாகி, நாடு மீண்டும் கிரே பட்டியலுக்குள் விழும் அபாயம் இருப்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

பாகிஸ்தானில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் சட்டவிரோதமாகவே நடைபெற்று வருகின்றன. டிஜிட்டல் பரிவர்த்தனையை முறைப்படுத்துவதற்கான சட்டங்களைத் திருத்துவதில் பாகிஸ்தான் பின்னோக்கியே உள்ளது. கிரிப்டோ மற்றும் டிஜிட்டல் சொத்துக்களுக்கான ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்குவதற்காக முன்மொழியப்பட்ட அவசரச் சட்டம் இன்னும் மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.

பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளிக்கும் விவகாரத்தில், கடந்த 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தான கிரே பட்டிலில் சேர்க்கப்பட்டது. அதன் பின்னரும், பயங்கரவாத நிதி மற்றும் பணமோசடியைத் தடுக்கத் தவறியதன் காரணமாக அப்பட்டியலில் இருந்து பாகிஸ்தானால் மீள முடியவில்லை. 2018 ஜூன் முதல் 2022 அக்டோபர் வரை, பாகிஸ்தான் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகச் சாம்பல் பட்டியலில் இருந்தது. சர்வதேச அளவிலான அழுத்தத்தின் காரணமாக, கிரே பட்டியலில் இருந்து வெளியேறப் பாகிஸ்தான் கடுமையாகப் போராட வேண்டியதிருந்தது.

மீண்டும் கிரே நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்பட்டால், பயங்கரவாத நிதி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியாத நாடு என்று சர்வதேச நிதி நடவடிக்கை குழுவால் அறிவிக்கப்படும். இதனால் சர்வதேச நிதியம், உலக வங்கி போன்ற அமைப்புகளிடம் இருந்து கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.

கிரே பட்டியல் என்பது, சரியான நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட நாட்டை அறிவுறுத்தும் எச்சரிக்கையாகும். அதைப் பொருட்படுத்தாமல், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால், மிகக் கடுமையான விதிகளைக் கொண்ட ‘கருப்பு பட்டியலில்’ பாகிஸ்தான் சேர்க்கப்படும். இந்நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் ஔரங்கசீப்பின் பேச்சு, பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டுவதை பாகிஸ்தான் அரசு கொள்கையாகவே வைத்திருப்பதாக இந்தியா முன்வைத்துள்ள வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

Tags: pakistan news todayRisk of being blacklisted: Pakistan in trouble over illegal transactionsசிக்கலில் பாகிஸ்தான்
ShareTweetSendShare
Previous Post

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

மருத்துவ சீட்டுகளில் குறிப்புகள் தலைகீழாக எழுதும் ஊழியர்கள்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies