மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளின் மருத்துவ சீட்டுகளில் குறிப்புகள் தலைகீழாக எழுதப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் நோயாளிகளின் விவரங்களை மருத்துவர்கள், செவிலியர்கள் புரிந்து கொள்ளச் சிரமப்படுவதாக நோயாளிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுபோன்று அலட்சியமாகச் செயல்படும் ஊழியர்கள் மீது மருத்துவமனை முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.