உலகத் தலைமையை ஏற்கும் நிலையை இந்தியா இன்னும் அடையவில்லை என கொலம்பியாவில் ராகுல்காந்தி பேசிய விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கொலம்பியா சென்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி அங்குள்ள இஐஏ பல்கலைகழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், ஜனநாயகம் மீது அனைத்து திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படுவதே இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவால் என தெரிவித்தார். பாரம்பரியம், மதம் மற்றும் கொள்கைகளுக்கு உரிய இடத்தை உருவாக்குவதே ஜனநாயக அமைப்பு. ஆனால், இந்தியாவில் அதன் மீதே தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக ராகுல் காந்தி விமர்சித்தார்.
ராகுல்காந்தியின் இந்த கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜவை விமர்சிப்பது ராகுல்காந்தியின் உரிமையாக இருக்கலாம். ஆனால் மலிவான மற்றும் அற்ப அரசியலுக்காக இந்திய தாயை அவமதிக்காதீர்கள் என ராகுல்காந்திக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.