சத்தீஸ்கரின் ஜக்தல்பூரில் தசரா விழாவையொட்டி நடைபெற்ற முரியா தர்பார் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்மாநில முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மேடையில் பேசிய அமித்ஷா, நக்சல்கள் ஆயுதம் ஏந்தி அமைதியை சீர்குலைக்க முயன்றால், நமது ஆயுதப்படைகள் தக்க பதிலடி கொடுக்கும் எனத் தெரிவித்தார்.