தென்காசி பேருந்து நிலையம் அருகே திடீரெனத் தீப்பிடித்து எரிந்த காரால் பதற்றம் நிலவியது.
பாவூர் சத்திரத்தை சேர்ந்த குடும்பத்தினர் வெளியூர் செல்வதற்காகப் புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது காரில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து காரில் பயணித்தவர்கள் விரைவாக இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.