திக்...திக்..பக்..பக்.. : சிதிலமடைந்த குடியிருப்புகள் - திகிலுடன் வாழும் மக்கள்!
Oct 19, 2025, 02:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திக்…திக்..பக்..பக்.. : சிதிலமடைந்த குடியிருப்புகள் – திகிலுடன் வாழும் மக்கள்!

Web Desk by Web Desk
Oct 19, 2025, 12:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் திகில் படங்களில் வரும் பாழடைந்த பங்களா போல் காட்சியளிக்கும் வீட்டுவசதி வாரியத்தின் குடியிருப்பில் பொதுமக்கள் வாழவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஆங்காங்கே தேங்கியிருக்கும் கழிவுநீரால் பொதுமக்கள் சுகாதார சீர்கேட்டை எதிர்கொள்ளும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள நாராயண நகர் மற்றும் குறிஞ்சி நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளன. 10 அலகுகளில் 400க்கும் அதிகமான வீடுகளை உள்ளடக்கியிருக்கும் இந்தக் குடியிருப்பு மிகவும் பாழடைந்த நிலையில் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கும் குடியிருப்புகளைச் சீரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை தற்போதுவரை நிறைவேறாமல் இருப்பதாகக் குடியிருப்புவாசதிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

திகில் திரைப்படங்களில் வரும் பழமையான கட்டடங்களை போலக் காட்சியளிக்கும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் குடிநீர் தொடங்கி எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக அடிப்படை வசதிகளில் ஒன்றான கழிவுநீர் கால்வாய் வசதிகள் இல்லாத காரணத்தினால், ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு நிலவும் அபாயமும் எழுந்துள்ளது.

கழிவுநீர் கால்வாய் தண்ணீரை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், சில நேரங்களில் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதால் குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அதிலும் அவ்வப்போது இடிந்து விழும் மேற்கூரைகள் மற்றும் பால்கனிகளால் சிலர் காயமடைந்திருக்கும் நிலையில் இரவு நேரங்களில் நிம்மதியாகத் தூங்கக் கூட முடியாத அவலநிலைக்கு குடியிருப்புவாசிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

சேதமடைந்த நிலையில் இருக்கும் குடியிருப்பைப் புணரமைக்க வேண்டும் எனப் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதற்கான தொடக்கப்பணிகள் கூட இன்றளவும் நடைபெறவில்லை என்பதே குடியிருப்புவாசிகளின் பிரதான குற்றச்சாட்டாக அமைந்துள்ளது.

குடியிருப்புவாசிகளிடம் உரிய நேரத்தில் உரிய வாடகையை பெறும் வீட்டுவசதிவாரியம் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது கடமை என்பதை உணர்ந்து உடனடியாகச் சிதிலமடைந்த குடியிருப்புகளைப் புனரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: Tick...tick..p..p..: People living in fear of dilapidated apartmentsதிகிலுடன் வாழும் மக்கள்
ShareTweetSendShare
Previous Post

உத்தரபிரதேசம் : தீப்பிடித்து எரிந்த பேருந்து – உயிர்தப்பிய பயணிகள்!

Next Post

டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் போராட்டம்!

Related News

அருவி நீரில் மூழ்கிய மாணவரை தேடும் பணி தீவிரம்!

சீன ஏவுகணை பகுப்பாய்வு ரகசியம் என்ன? : ஆபத்தாக மாறும் அஸ்திரா-2 ஏவுகணை!

உச்சக்கட்ட அவமானத்தில் பாகிஸ்தான் : 93000 பேண்ட் விழா 2.O கொண்டாடிய ஆப்கன்!

இன்ஜினில் ஏற்பட்ட பழுதால் நடுவழியில் நின்ற அரசு பேருந்து – பயணிகள் கடும் அவதி!

இந்தியாவின் பாதுகாப்பில் மைல்கல் : உள்நாட்டில் தயாரான அதிநவீன பாராசூட் !

இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான் : பட்டும் திருந்தாத அசிம் முனீர்!

Load More

அண்மைச் செய்திகள்

மும்பை விமான நிலையத்தில் ரூ.1.60 கோடி மதிப்புள்ள 1.20 கிலோ தங்கம் பறிமுதல்!

செங்கடலில் பயணித்த சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

இந்தியாவின் பெண் அயன்மேன் பட்டத்தை வென்று ஐஐடி மெட்ராஸ் மாணவி சாதனை!

வாள்வீச்சு போட்டியில் வெள்ளி வென்றார் பவானி தேவி!

சீனா : நடுவானில் விமானத்தில் தீ விபத்து!

அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்த படி சென்ற வெள்ள நீர்!

பாலாற்றின் நடுவே சிக்கிய 2 பேரை மீட்ட தீயணைப்புத்துறை வீரர்கள்!

லஞ்சத்தில் ஊறிய ஐபிஎஸ் அதிகாரி : கட்டுக்கட்டாக பணம், தங்கம் பறிமுதல்!

கோவை : தரைமட்ட பாலம் மூழ்கியதால் மக்கள் கடும் சிரமம்!

வைகை அணையின் நீர்மட்டம் 67 அடி கனஅடியாக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies