விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கீழ்வையலாமூர் கிராமத்தைச் சேர்ந்த பலராமன் என்ற விவசாயி வயல் வெளிக்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சட்டவிரோதமாக மின் வேலி அமைத்த லட்சுமணன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















