சாணியடி திருவிழாவை தவறாக சித்தரிப்பதா? : இந்தியர்கள் கண்டிப்பு - பின்வாங்கிய அமெரிக்க யூடியூபர்!
Jan 14, 2026, 08:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சாணியடி திருவிழாவை தவறாக சித்தரிப்பதா? : இந்தியர்கள் கண்டிப்பு – பின்வாங்கிய அமெரிக்க யூடியூபர்!

Murugesan M by Murugesan M
Nov 8, 2025, 08:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகாவில் மிகவும் பிரபலமான சாணியடி திருவிழாவை ஆவணப் படமாகப் பதிவிட முயன்ற அமெரிக்க யூடியூபர், இந்தியர்களின் ஒற்றைக் குரலால் பின்வாங்கியுள்ளார். என்ன நடந்தது. அமெரிக்க யூடியூபர் என்ன செய்தார் என்பதை தற்போது பார்க்கலாம்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான பீரேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கோரேஹப்பா திருவிழா மிகவும் பிரபலம். கிராமம் முழுவதும் சேகரிக்கப்படும் மாட்டு சாணத்தை கோயிலில் பின்புறம் குவிக்கும் பக்தர்கள், அவற்றைப் பெரிய பெரிய உருண்டைகளாக உருட்டி, ஒருவர் மீது மற்றொருவர் வீசி விளையாடுவதும், பின்னர் அங்குள்ள குளத்தில் குளித்துச் சுவாமியை வழிபடுவதும் மரபு.

இத்திருவிழாவில், மிகுந்த ஆர்வத்தோடு பங்கேற்றிருக்கிறார் அமெரிக்காவின் பிரபல யூடியூபர் டைலர் ஒலிவேரா. அதனை ஆவணப்படமாக வெளியிடப் போவதாகக் கூறிய அவர், இந்தியாவின் “சாணம் வீசும் திருவிழாவின் உள்ளே” என்ற தலைப்பில் ஒரு டீசரை வெளியிட்டது பல மில்லியன் பார்வைகளை கடந்தது. திருவிழாவில் பாதுகாப்பு கவச உடை அணிந்தபடி கலந்து கொண்ட அவர், அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

இந்தியாவின் சாணம் வீசும் திருவிழாவில் கலந்து கொண்டது மோசமான அனுபவமாக இருந்தது, நான் பிழைக்க வேண்டும் என்று தயவு செய்து பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் பதிவிட்டிருந்தார். இது இந்தியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவின் பாரம்பரிய திருவிழாவை டைலர் ஒலிவேரா அவமதித்துவிட்டதாகப் பலரும் கண்டனம் பதிவுகளைப் பதிவிட்டனர். 99 சதவிகித இந்தியர்களுக்கே சாணம் வீசும் திருவிழாவைப் பற்றித் தெரியாதபோதும், அத்திருவிழாவையும், தீபாவளியையும் தொடர்புபடுத்தியிருப்பது இனவெறியின் அடையாளம் என்றும் அமெரிக்க யூடியூபர் மீது விமர்சன கணைகளைத் தொடுத்தனர். ஆனால் இனவெறியை பற்றிய குற்றச்சாட்டுகளை டைலர் ஒலிவெரோ மறுத்திருந்தார்.

ஒரு அசாதாரண கலாச்சார நிகழ்வைக் கேலி செய்வதற்குப் பதிலாக அதை ஆவணப்படுத்துவதே தனது நோக்கம் என்றும் விளக்கம் அளித்திருந்தார். எனினும் கண்டனங்கள் வலுத்த நிலையில், பல்வேறு பரிசீலனைக்கு பின்னர், சாணம் வீசும் திருவிழாபற்றிய ஆவணப்படத்தை பதிவேற்றம் செய்ய விரும்பவில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறியுள்ளார். தன்னால் 150 கோடி இந்தியர்களைச் சமாளிக்க முடியாது என்றும் பதிவிட்டுள்ள அவர், பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் தனது வாழ்க்கையை ஒரு நரகமாக மாற்றிவிட்டதாகவும், என் குடும்பம் நான் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத வகையில் தாக்கப்பட்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.

சாணம் வீசும் திருவிழாவுக்கு வந்தது தமது வாழ்க்கையின் மோசமான முடிவு என்றும், தாம் இந்தியாவின் சக்தியைக் குறைத்து மதிப்பிட்டேன் என்றும் பதிவிட்டுள்ளார். இந்தியர்களையோ, அவர்களின் மதத்தையோ அல்லது அவர்களின் கலாச்சாரத்தையோ புண்படுத்தத் தாம் ஒருபோதும் விரும்பவில்லை.

இந்த அசாதாரண திருவிழாவில் பங்கேற்று, உலகம் பார்க்கும்படி பகிர்ந்து கொள்ள விரும்பினேன் என்றும் கூறியுள்ளார். இதைப் படிக்கும் அனைத்து இந்தியர்களும் தயவுசெய்து என் குடும்பத்தைத் தனியாக விட்டுவிடுமாறு கேட்டுக்கொள்வதாகவும் கெஞ்சியிருக்கிறார் அமெரிக்க யூடியூபர் டைலர் ஒலிவேரா. ஆனால், இந்தியாவின் கலாச்சாரத்தைப் பார்த்து உலகம் வியந்துவரும் சூழலில், வேடிக்கையான சில திருவிழாக்கள் மொத்த இந்தியாவையும் பிரதிபலிப்பதாக அமெரிக்க யூடியூபர் முன்னிறுத்த முயன்றதையோ பலரும் சாடியதாக இணையவாசிகள் கூறி வருகின்றனர்.

Tags: Misrepresenting the Chaniyadi festival?: Indians condemn - American YouTuber retractsசாணியடி திருவிழாபின்வாங்கிய அமெரிக்க யூடியூபர்
ShareTweetSendShare
Previous Post

விவசாயிகளைப் பறிதவிக்கவிடுவது தான் “பொற்கால” திமுக ஆட்சியின் அம்சமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

குண்டாக இருந்தால் இனி அமெரிக்க விசா கிடைக்காது? – ட்ரம்ப் புதிய உத்தரவு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies