ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே வளர்ப்பு நாய் கடித்ததில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
கனகபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர், ரங்கம்பாளையத்தில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன் மாணவரை வளர்ப்பு நாய் கடித்துள்ளது.
வளர்ப்பு நாய் என்பதால், ரமேஷ் மருத்துவ சிகிச்சை பெறாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
எனினும் கடந்த சில நாட்கள் முன்பு ரமேஷின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் மாணவர் ரமேஷ், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
















