தைவானில் 2வது முறையாகச் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தைவானில் ரிக்டர் அளவில் 7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், தலைநகர் தைபெயில் உயரமான கட்டடங்கள் அங்கும், இங்கும் ஆடின. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் இலன் நகரில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில், 73 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகத் தைவான் புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக இலன் நகரில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குடிநீர் மற்றும் எரிவாயு குழாய்களில் கசிவு ஏற்பட்டன.
எனினும் பெரிய அளவிலான சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்களை தெரிவிக்கின்றன.
















