மயிலாடுதுறை அருகே பரதம் ஆடும்போதே யோகா செய்து அசத்திய சிறுமிக்கு பாராட்டுகள் குவிகின்றன.
மயிலாடுதுறையில் தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டுத்துறை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது.
மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், எம்எல்ஏ ராஜகுமார் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
இதில் பரதநாட்டியம், கிராமிய நாட்டுப்புறக் கலைஞர்களின் பச்சைக்காளி, பவளக்காளி நடனம், நையாண்டி மேளம், சிலம்பம், பறை இசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில், பரதநாட்டியம் ஆடும் போதே யோக கலைகளில் பல்வேறு ஆசனங்களை செய்து அசத்திய சிறுமிக்கு பார்வையாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, கலை நிகழ்ச்சியில் பங்கேற்வர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
















