கோழி வளர்ப்புக்கான அடிப்படை கூலியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கறிக்கோழி விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அன்னூர், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் கோழி வளர்ப்பு விவசாயிகள், வளர்ப்பு கூலியை உயர்த்தி தரவேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
சில தினங்களுக்கு முன்பு கோழி வளர்ப்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை என பிராய்லர் கோழி நிறுவனத்தினர் திட்டவட்டமாக மறுத்தனர்.
இந்நிலையில், வளர்ப்பு கோழி பண்ணையாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மேலும், கறிக்கோழி நிறுவனங்கள், கறிக்கோழி பண்ணை விவசாயிகள் மற்றும் சங்கங்களை உள்ளடக்கிய முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
















