நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட வார்த்தை மோதல் வீடியோ வைரலாகி வருகிறது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு நேரில் சென்று ராகுல் காந்தி தனது ஆதரவைத் தெரிவித்தார்.
அப்போது, அவ்வழியாக அவைக்கு செல்வதற்காக வந்த மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவை பார்த்து, துரோகி வருகிறார் என கூறிய ராகுல் காந்தி, அவரிடம் கை குலுக்க கையை நீட்டினார்.
இதனையடுத்து, ராகுல் காந்தியின் கையைப் பிடிக்க மறுத்த மத்திய அமைச்சர் ரவ்னீத் பிட்டு, அவரைப் பார்த்து “நாட்டின் எதிரி” எனக் காட்டமாக சாடிவிட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்து சென்றார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
















