ராமேஸ்வரத்தில் இருந்து அடுத்த மாதம் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்பு இருப்பதாக, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என் சிங் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் ரயில் நிலைய மேம்படுத்தப்பட்ட பணிகளை ஆய்வு செய்த பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் அடுத்த மாதம் நிறைவடையும் என கூறினார்.
லாந்தை பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதில் இடர்பாடுகள் இருப்பதாக குறிப்பிட்ட அவர், ஒரு வருடத்திற்குள் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும், சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்த பின் ராமேஸ்வரம் – தனுஷ்கோடி இடையே ரயில் சேவை தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும் எனவும், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என் சிங் கூறினார்.
















