19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக்கோப்பை தொடர், ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 2ஆவது அரையிறுத்தி போட்டியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பைசல் ஷினோசடா 110 ரன்களும், நியாஜாய் 101 ரன்களும் விளாசினர். இதனை தொடர்ந்து, 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
தொடக்க வீரரான சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 33 பந்தில் 68 ரன்கள் அடித்தார். ஆரோன் ஜார்ஜ் 115 ரன்களும், ஆயுஷ் மாத்ரே 62 ரன்களும் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதன் மூலம் 3 விக்கெட்களை இழந்து 41.1 ஓவர்களிலேயே இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டியது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
















