நெல்லையப்பர் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் நரிக்குறவரின குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் கோயில் நிர்வாகத்தின் விளக்கத்திற்கு மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நெல்லையப்பர் கோயிலில் அண்ணா நினைவு தினத்தையொட்டி சமபந்தி விருந்து நடைபெற்றது. சபநாயகர் அப்பாவு பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் நரிக்குறவரின குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் கோயில் நிர்வாகம் சிசிடிவி காட்சியே வெளியிட்டு விளக்கமளித்துள்ளது. உணவு முடிந்ததால்தான் குழந்தைகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிசிடிவி காட்சிகளுக்கும், விளக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
















