நடுக்கடலில் நோய்வாய்ப்பட்டு மயக்கமடைந்த மீனவரை இந்திய கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.
இது தொடர்பாக சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல்படையின் பிராந்திய தலைமையகம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 4ஆம் தேதி இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாக மாநில மீன்வளத்துறையிடம் இருந்து தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, கடலில் ரோந்து பணியில் ஈடுபட்ட கடலோர காவல்படையினர் சென்னைக்கு சுமார் 45 கடல் மைல் தொலைவில், நோய்வாய்ப்பட்ட மீனவரை வெற்றிகரமாக மீட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மீனவரை அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தாகவும் கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.
















